Posts

Showing posts from January, 2019

கவிதை நேரம்

Image
இரவின்மடியிலே கற்பனைஊற்று பெருகுகிறது... எழுதுகோலும் எழுதுகிறது... என்கவிதை வடிப்பதற்கு...

பள்ளி தோழியே...

Image
வயக்காடு வரப்பில் தூக்குசட்டி ஆட்டிக்கிட்டு துள்ளிநடந்து வந்ததென்ன... பள்ளிதோழியே பந்தமாய்  பாக்குமிட்டாய் வாங்கிகிட்டு காக்காகடி தின்னதுதென்ன... ஆத்து மணலில் கோட்டை கட்டினோமே... அத்தி மரத்தில் ஊஞ்சல் ஆடியிருந்தோமே... வைக்கோலில் ஒளிந்திடுவோமே... வண்டியில்வரும் கரும்பை வழியிலே உடைத்திடுவோமே... கோயில்மணி அடிக்கையிலே பொங்கல்வாங்க ஓடிடுவோமே... பொங்கிவரும் ஆத்தினிலே பொழுதை கழித்திடுவோமே... பிள்ளை வந்தான்னடி பெண்பேசி சென்றான்னடி... பிரிந்தது நம்மண்ணில்லடி பேதையை தேடுவாய்யாடி...! மீண்டும் பார்ப்போமா...? பள்ளிதோழியாய் சந்திப்போமா...? கேள்வியில் நிற்கிறேன் வாராய் என்தோழியே....

கொடி

Image
கொடி பறக்குது அடிசொல்லி பறக்குது... மேல் வண்ணம் செவ்வண்ணம் நீதி பரிபாலம் காக்கட்டும்... வெண்மை வண்ணம் தூய்மை காணட்டும்... பச்சை வண்ணம் பசுமை வளரட்டும்... பாருக்குள்ளே நம்நாடு பாரதமே நல்நாடு... குழந்தை வதையை தடுத்திடுங்கள் குற்றம் புரிந்தோரை களைந்திடுங்கள் சுயநலத்தை விடுங்கள் சுற்றங்களை காணுங்கள் ஒற்றுமையின் வலிமை பாருங்கள் வளர்க நாடு...வாழ்க புகழ்ழோடு...

அருவி

Image
இறைவி (கங்கை) விழுந்தாள்... அருவி வந்தாள்... மடை நிறைந்தாள்... பசுமை பூத்தாள்... கதம்பம் (பூ,காய்,கனி...) சேர்ந்தாள்... இறைவன் காலடிலே...

கண்மணியே...(கண் வைத்து கவிபாடல்)

Image
விழிபாத்தியில் கண்ணே விதைத்து விடு என்னை... வேல்விழியில் நீ வீழ்த்தினாய் என்னை... கயல்விழியில் காந்தம் இழுக்கிறாய் என்னை... கண்களை மூடினால் கருவிழி நீ மறைவாய்யே... கெண்டமீன் கண்களடி நீ வலைக்கண் வீசுகிறேன் நான்... தூண்டிலில் கண்ணே நீ மாட்டுவாய்யா... துள்ளி காத்திடுவேன் கண்மணி உன்னை... மனக்கண் திறந்தாலும் மதிஅழகி நீ அங்கிருப்பாய்... ஆதிசுந்தரி கண் அசைத்தாலும் அன்பே உன்னை நான் மறவேன்...