டீரிங்...டீரிங்.. காலிங்பெல் (சிறுகதை)
(காட்சி ஆரம்பம்:மனைவி கோபமாக கண்ணைசுருக்கி கதவை திறத்தல்)
மதன்: ஹாய்..அப்படி பார்க்காதடா...சாரி டியர்... வெளில போகலாம்னு சொல்லியிருந்தில....ரம்ப ப்ரண்ட் பிடிச்சுடான்...அதான்டா...சாரி..
சாருலதா: சீனிவாசன் பேரனுல... டெய்லி ஒரே பல்லவி தான்...
மதன்: பல்லவி இல்ல சரணு... சத்தியம்ப்பா....
சாருலதா:ஹா..ஹா... உங்களை....(இன்னும் சிரிக்கிறாள்)
மதன்:அப்பா...ஒருவழியா... சிரிச்சிட்டே... இன்னைக்கு என்ன டிபன்...?
சாருலதா:காபி அன்ட் காய்ந்த ஃப்ரட்..
மதன்:இது டிபனா..? இன்னைக்கு போட்டானே ஆபிஸ் கேன்டீன்ல...மொரு மொரு ரவா தோசை...நெய்சேமியா கேசரி...சாம்பார்வடை... பொட்டுக்கடலை சட்னி...
ஐயோ..!அதோட வாசம் என் கைவிட்டு இன்னும் போகலை....நீ என்னனா ஒன்னும்இல்லாதற்கு 'டிபன்னு' சொல்லிக்கிற...?
சாருலதா:(முகம் சிவக்க)பார்க்கிறாள்....
மதன்:ஐ..ஐயோ..உளரிட்டேனே....அங்கே பார்த்தேனா... இங்கே ஒன்னும்மில்லையா.அதான் சொன்னேன்....ஹீ ஹீ..
சாருலதா:கையில வாசம் எப்படி வந்திச்சு... தொட்டு தொட்டு சாமி கும்பிட்டுங்களா...?
மதன்:ஆமா...ச்சீ..இல்ல...
மறுபடியும் முதல் காட்சி ஆரம்பமாகிறது...ஊடல் முடிந்தவுடன் கூடல் அங்கு அரங்கேறும்......
Comments
Post a Comment