கிருஷ்ணனில்
கர்ணன்....
மதுரத்தின்
ஸ்ருதி....
சிரிப்பின்
சிற்பி....
ஏட்டு படிப்பில்
விஞ்ஞானம் அளந்தது....
ஏழ்மையில்
ஆளுமை கொண்டது....
சுந்தர பாட்டில்
சுதந்திரம் கேட்டது....
மங்கிய செல்வம்
மங்கா புகழ்
ஒருங்கே கொண்ட
சீர்மிகு சிந்தனைவாதி...!
குயில் கூவும் இந்த குயில் போர் புரியும்... யார் இந்த குயிலி..? வேலுநாச்சியின் படைத்தளபதி...! காளையார் முதல் சிவகங்கை வரை பரங்கியர் கூட்டம்... கிடங்கில் வெடிகுவியல்; கொன்று குவிக்கும் கும்பினியன்... தோல்வி விளிம்பில் வேலுநாச்சிபடை... ஆயுதம் விட்டாள் குயிலி... எரிகின்ற நெய்யை பூசி; வெடிகுவியலில் விழுந்தாள்; வெடித்து சிதைந்தாள்... பரங்கியர் பதுங்கினர்... பயந்து ஒதுங்கினார்... பெண் இனத்தின் போராளி... போற்றபடவேண்டிய தமிழச்சி; மறந்த வரலாற்றை நினைவுகூறுங்கள் நம் சந்ததினருக்கு.. வீரம் பிறக்கட்டும் தீரம் நிலைக்கட்டும்...
புல்லில் மான் புள்ளி மான் சீதை கவர்ந்த மாய மான் சீவிய கொம்புஅது சிங்காரத்தின் அழகுஅது வேடன் இங்கில்லை வேண்டிய மட்டும் மேய்ந்து கொள் மேயாத கானகத்தில்...
Comments
Post a Comment