பாரதியார்

பாரதி
இந்த ஒற்றைசொல்லில்
வீரம் பிறக்கும்;
மீசை முளைக்கும்;
பெண்டீர் ஆயினும்....
பாட்டில் பாலூட்டுவாய்
எம் பிள்ளைகளுக்கு
செந்தமிழ் நாவினால்....
பரங்கியரும் பதறுவர்
நீ பாடும் சந்தத்துக்கு....
கலைவாணியே ,
உன் தவபுதல்வனை
உன் கனரகவாகனத்தால்
ஆலிங்கனம் ஏன் செய்தாய்...!
தமிழ்த்தாய் தத்தெடுத்ததாலா...?
பார் போற்றுகின்றது இன்று,
பசியால் வாடிய வயிறு அன்று...
தாய்யாய் பதறுகிறன்
சேய்யாய் துடிக்கிறேன்
ஓடி விளையாட
நீ...ஓடோடி வா...


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்