கற்பனை சக்தி


மாய ரூபன்
மதியில் இருக்கும்;
ஆய கலைகளில்
வெள்ளோட்டம் பார்க்கும்;
அன்பு உள்ளோரிடம்
அணிகலனாய் தவழும்;
தோல்வி அடைந்தாலும்,
வெற்றி கண்டதாய்
கனா காணும்...
புல்லும்,புலியாய்
இருக்கும் இதன் சக்தியிலே...
காட்டாறு வெள்ளமாய்
கரை புரண்டு ஓடும்...
வல்லமை தந்தால்
அது கற்பனை சக்தி...
வக்ரம் தந்தால்,
அளவு மிஞ்சிய அமிர்ததின்
நிலையே அதன் சாட்சி...?

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்