கொல்லிமலை காட்டில் ஓர் நாள்
சுற்றி வனாந்தரம்...
ஒற்றைபாதை பல
சருகு சத்தம் சலசல...
புதுமழையில் தழைகள்
புதுசாய் முளைக்குது;
பூக்கள் பூக்குது
இணையின் சேர்ப்பிலே.
ஓடையவள்...
வளைந்து:நெளிந்து,
யாரை கண்டு பொங்கி;
மயங்கி விழுகிறது அருவி...?
பகுத்தறிவாளனையும்,
நடுங்கிய வைக்கும்
பேய்க் காற்று...!
பண்பாளனும் பற்றவைப்பான்
தீப்பந்தம்...!
கதிரவன் கணப்புக்கு
காத்திருக்கும் உயிரினம்...
கதகதப்பை தேடும் மனிதஇனம்..
மறுநாள் விடியும் முன்னே
இந்நாள் சுகம்தரும் பின்னே...!

Comments
Post a Comment